Ad Widget

நாவாந்துறையில் குழு மோதல்: 9 பேர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர். யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

முடிந்தளவுக்கு மஹிந்தவை தோற்கடிப்போம் – கஜதீபன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் முடிந்தளவுக்கு தோற்கடிக்கவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். பொது நிறுவனங்களின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவு கூட்டம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...
Ad Widget

தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்

யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். இதன்போது யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தொண்டராசிரியர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியிருந்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

தேர்தல் விதிமுறைகளை மீறி யாழில் வீடுகளை கையளித்தார் நாமல்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நாமல் ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நாமல் ராஜபக்ச இன்று குறித்த வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களில் பண்டத்தரிப்பு பல்லசுட்டி பகுதியில் வசித்து வரும் 20 பேருக்கு வீடுகளைக்...

அமெரிக்காவில் விழுந்த விமானம்; 4 பேர் பலி, உயிர்தப்பிய சிறுமி

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 7 வயதுச் சிறுமி அதிசயிக்கத் தக்க வகையில் உயிர் தப்பியுள்ளாள். விமானம் விழுந்த இடத்தில் இருந்து அருகிலுள்ள வீடொன்றுக்கு நடந்து சென்ற அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் சிதிலங்கள் காட்டுப் பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. விமானியும்...

போகோ ஹராமால் 40 பேர் கடத்தப்பட்டதாக சந்தேகம்

நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த...

ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது. அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில்...

அலைபாயுதேயின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் – பி.சி.ஸ்ரீராம்

மணிரத்னம் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ் நடிப்பில் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தவேளை மணிரத்னம் எடுத்த படம், அலைபாயுதே. மாதவன், ஷாலினி நடித்த அப்படத்துக்கும் பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராவணன்,...

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் பொலிஸார் திடீர் தேடுதல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அவ்வாறான பிரசுரம்...

மைத்திரி குழுவினர் கூட்டமைப்பினரை யாழில் சந்தித்தனர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை மு.ப.11 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மைத்திரி குழுவினருடனான இந்தச் சந்திப்பில்...

மறைக்கப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டன

தேர்தல் விதிமுறைக்கமைய யாழ்ப்பாணப் பொலிஸாரால் மறைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள், ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த வேளையில் மறைப்பு எடுக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், செல்வா சதுக்கம் அருகில், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில், பலாலி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

தேர்தல் பிரசார கூட்டத்தில் கைகலப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நீலப்படையணிக்கு வழங்கப்படும் உடையை பகிர்ந்தளிக்கும் போதே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது....

ஜனாதிபதி மஹிந்தவை ஏசிய வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர்

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஏசுவதாக நினைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏசிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தர தாமதமாகியதால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை...

ஏர் ஏசியா விமான விபத்து: 2 விமான பாகங்கள்- 46 உடல்கள் மீட்பு

கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது....

இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்

கப்பல் படத்தில் கரகாட்டக்காரனில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் பயன்படுத்தியதற்காக அதன் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் ஷங்கர் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் கப்பல் என்ற படம் வெளியாகியுள்ளது. கார்த்திக் ஜி கிரீஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெறும்...

தேசிய கிரிக்கெட் அணியில் சென்ஜோன்ஸ் வீரர்கள் தெரிவு

இலங்கை, பங்களாதேஷ் நாடு களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடை பெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள்...

பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் – ஜனாதிபதி

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்களே தவிர, செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். சொல்வதை செய்வேன், அதனை கடந்த 9 வருடங்களில் செய்தும் காட்டியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ். ரில்கோ விடுதியில்...

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

யாழ்.நாவாந்துறைப் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேயிடத்தை சேர்ந்த சந்திரகுமார் சஞ்சீவன் (வயது 30) என்பவரே படுகாயமடைந்தார். இரு குழுக்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற கைகலப்பை கட்டுப்படுத்த சென்ற இராணுவத்தினரே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாவாந்துறை சந்தியில் இரு குழுக்களுக்கிடையில்...

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு?

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு: வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது...

நீங்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவரா?

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி குறித்த அரச ஊழியர்கள் அருகில் உள்ள மாவட்ட தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts