Ad Widget

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் நிறுத்தப்படும்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

எண்ணெய் கசிவுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து...
Ad Widget

வீடமைப்பு அதிகார சபையால் 303 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...

செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் போராட்டங்கள் அவசியமில்லை – ஐங்கரநேசன்

குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு...

பாலிவுட்டில் தனுஷ் எடுக்கும் மற்றுமெரு புதிய அவதாரம்!

தமிழில் மட்டும் கலக்காமல் பாலிவுட்டிலும் தன் திறமையை காட்டி வரும் தனுஷ் விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார். தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு வெற்றி படங்களில் கொடுத்தா தனுஷ் பாலிவுட்டிலும் வெற்றி படலத்தை தன் தயாரிப்பு நிறுவனம் முலம் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து படங்களை தயாரிக்க போகிறாராம். மிக விரைவில்...

தமிழரசுக்கட்சி பாரபட்சம்! அனந்தியை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியது

சனாதிபதித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி பாலவை ஆதரிப்பதாக முடிவை அறிவித்ததன் பின்னர் அதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரான சிவகரனினால் கட்சி உறுப்பினர் மறவன்புலோ சந்திதானந்தனுடன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கட்சியில்...

உலகக்கோப்பை நடத்தப்படும் வடிவம் பிடிக்கவில்லை – ராவிட்

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் ராவிட் விமர்சித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் ராவிட் கூறியதாவது: "எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே...

வரியற்ற வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களிலுள்ள அனைத்து வரியற்ற வர்த்தக நிலையங்களினதும் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார். அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 'முன்னைய காலங்களில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பி.நந்தகுமார் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தெல்லிப்பளை வைத்தியசாலையிலுள்ள கிணற்றில் எண்ணெய் படலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்று பரிசோதனை செய்தபோது எண்ணெய் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள்...

அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் – கஜேந்திரன்

தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை ஒரு தரப்பு மட்டும் அனுபவிக்காமல் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார். ஆனைக்கோட்டை கூழாவியடி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம்...

அரசியல் இலாபத்திற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள் – வேலையற்ற பட்டதாரிகள்

அரசியல் தலையீடு காரணமாகவும் ,சுயஇலாப நோக்கத்திற்காகவும் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள் என வடமாகாண வேலையற்ற பட்டாதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான முறையில் இடம்பெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்ப்பது...

காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்

பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியினை இராணுவத்துக்கு...

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இரண்டால் குறைந்தது

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைக்கு அமைய, குறைக்கப்பட்ட இந்த இரு உறுப்பினர்களும், முறையே நுவர எலிய, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இளம் குடும்பஸ்தா் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை(20) இரவு 11 மணியளவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி எஸ்.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்தார்....

இளையராஜாவுக்கு அமிதாப், ரஜினி, கமல் மரியாதை!

உலக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். 1976-ல் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா,...

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்களை காணவில்லை

தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் நேற்று தெரிவித்தனர். யாழ். குருநகர் கடற்கரை வீதிப்பகுதியைச் சேர்ந்த அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அதே இடத்தினைச் சேர்ந்த அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 4.30...

வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலுக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு!

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ள ஒன்றுகூடலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. அரச நியமனங்களின்போது அரசியல் தலையீடுகளோ, தனிநபர் செல்வாக்குகளோ இருக்கக்கூடாது என்றும், தகுதி அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் இன்றி நடத்தப்படும்...

காலியில் நிற்கும் கப்பலில் 3000 மேற்பட்ட துப்பாக்கிகள்!

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கும் மகநுவர என்ற கப்பலில் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர். தமது மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இதன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனப் பாதுகாப்பு...

தமிழரின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுவேண்டும்!சம்பந்தன் வலியுறுத்து!!

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையானது அவசர விடயமாகக் கருதப்பட்டு தீர்க்கப்படவேண்டும் என்று புதிய அரசிடம் நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு வழங்கப்படும் தீர்வானது நியாயமானதாகவும், பயனுடையதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்றும், பிளவுபடாத இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளேயே தாம் இதனை...

முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு

முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் நிறுத்தி வைக்கப்பட்ட முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற வட மாகாண சமூக சேவை திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சமூக சேவைகள்...
Loading posts...

All posts loaded

No more posts