தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை(03) காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் 43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.