Ad Widget

நிரந்தர நியமனம் வழங்குங்கள் : உயர்தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் போராட்டம்

உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று நல்லூர் ஆலய சூழலில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தமது நிரந்தர நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 228 பட்டதாரிகள் ஒன்றிணைந்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்த பட்டதாரிகள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts