யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் மீது மீசாலைச் சந்திக்கு அண்மையில் இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை (29) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பஸ்ஸில் பயணித்த பயணிகளை பிறிதொரு பஸ்ஸில் அனுப்பி வைத்த சாரதி, பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.