Ad Widget

வடக்கு, கிழக்கைச்சேர்ந்த இளைஞர் இருவர் கைது

வடக்கு மற்றும் கிழக்கைச்சேர்ந்த இளைஞர் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற போதே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர் என்று தெரியவருகின்றது.

அவ்விருவரும் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையம் வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரிப்பதற்காக ஒரு இளைஞனிடமிருந்து 35 இலட்சம் ரூபாவை முகவர் ஒப்பந்தம் பேசியதாகவும் இத்தாலிக்கு சென்றதன் பின்னர் அப்பணத்தை தருவதற்கு அவ்விளைஞர்கள் இருவரும் முகவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts