Ad Widget

நேபாளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் வடமாகாண சபையில் அஞ்சலி!

நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கும் செம்மரங்களைக் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் ஆந்திராவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 தமிழர்களுக்கும் வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு இன்று காலை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள பேரவை அலுவலகத்தில் ஆரம்பமானது.

இந்த அமர்வின் தொடக்கத்தில் நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கும் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts