Ad Widget

தனுஷையே ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது. ஆனால், தனுஷின்...

புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 32 மில்லியன் ரூபா செலவில் வடக்கு விவசாய அமைச்சால் நிர்மாணம்

கிளிநொச்சி மாவட்ட மாயவனூரில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனால் நேற்று வெள்ளிக்கிழமை (23.01.2015) கையளிக்கப்பட்டுள்ளது. மாயவனூர் பகுதி மக்கள் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தாம் நீரின்றி அவலப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, விவசாய அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில்...
Ad Widget

சு.க.வின் தலைவர் மஹிந்தவே

ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது காணப்படுகிறார் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 10 தினங்களுக்கு முன்னர் அக்கட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவர் என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பாவே கட்சியின் செயலாளர் என்றும்...

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் வித்தியிடம் விசாரணை?

கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, நம்பகரமாக வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம்...

உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்!

எமக்கான சரியான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என, சுன்னாகம் சிவன் கோவில் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீருடன் சேர்வதால், வலி. வடக்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள 800க்கும் அதிகமான கிணறுகளில் கழிவு எண்ணெய்...

நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, முன்னதாக இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது. இதில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து, இந்த...

யாழில் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழா!

யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிடம் இன்று (23) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ் பழைய பூங்கா வீதியில் அமைக்கப்பட்டுள் இப் பயிற்சி நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 68 மில்லியன் ரூபா...

மகளிர் விவகார பிரதியமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் விஜயகலா

மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர், எமது அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துண்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சேவையாற்றவுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணம்,...

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் மீட்பு!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானவை எனக் கருதப்படும் 53 வானங்கள் புறக்கோட்டைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை நேற்றிவு ஸ்ரீஜெயவர்த்தனபுர களஞ்சியசாலையில் இருந்து மீரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானதென அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போயுள்ளன ஜனாதிபதி செயலகத்துக்குச்...

 கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் நிலையான வைப்பு நிதியை எடுக்கவேண்டாம்

கல்வியங்காடு செங்குந்தா சந்தையிலிருந்து பெறப்பட்ட வருமானங்களின் நிலையான வைப்புப் பணத்தை எடுத்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் அவைத்தலைவர் வியாழக்கிழமை (22) மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில்...

கோப்பாய் பொலிஸ் மீது தாக்குதல்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கோண்டாவில் பகுதியை சேர்ந்த மருத்துவமாதுவுக்கு மதுபோதையில் வீதியில் நின்றிருந்த மூன்று பேர் தகாத வார்த்தைகளால் பேசி, அவருடை விழிப்புலனற்ற கணவரை கடுமையாகத் தாக்கியதாக...

சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கோலகலமாக ஆரம்பமாகி தொடர்ந்து 3நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. தென்னிலங்கை வர்த்தகர்கள் -யாழ்ப்பாண வர்த்தகர்களிடையே வர்த்தக ரீதியாக தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று காலை 9மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்ற குறித்த கண்காட்சியின் ஆரம்பிப்பு நிகழ்வினூடாக விருந்தினர்கள் மேள,தாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு யாழ்.மாநகர சபை மைதானத்தில்...

சவுதி மன்னர் அப்துல்லா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி மன்னர் அப்துல்லா காலமானார். புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய மன்னராகும் சல்மான் தனது வாரிசாகவும் பட்டத்து இளவரசராகவும் அவரது உறவினர் முக்ரினை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியாவின் மன்னராக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட...

அங்கஜனுக்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி அவர்களை, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நகர சபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் வியாழக்கிழமை (22)...

முச்சக்கரவண்டிகள் கட்டணம் தொடர்பில் முடிவில்லை

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணம் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அகில் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பஜட் டெக்ஷி சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – டக்ளஸ்

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமென்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும்...

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் சம்பளம் உயர்வு – அமைச்சர் ரவி

அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்...

சம்பளம், எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன் – அமைச்சர் சஜித்

என்னுடைய மாதந்த சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன். அவற்றை வீடு அபிவிருத்தி நிதியத்தில் வைப்பிலிடுவேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை (22) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சிக்கு முன்மாதிரியாகவே இதனை...

மீள்குடியேற்றம் துரித கதியில் இடம்பெறும் – சுவாமிநாதன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...

பூமிக்கு நெருக்கமாக வரும் எரிகல் – ஆபத்தா?

விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும்,...
Loading posts...

All posts loaded

No more posts