Ad Widget

போரில் உயிர் நீத்தோருக்காக விளக்கேற்றி அஞ்சலிப்போம்! அனைத்து தமிழர்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு!!

மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக - அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், "உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப்...

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசுக்கு ஒத்துழைக்க மாடடோம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு!!

"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். "எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது....
Ad Widget

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...

கண்டெயினருடன் மோதிய யாழ் தேவி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில்...

புங்குடுதீவு மாணவி கொலைக்கு குடும்பப் பகையே காரணம் என்கிறது பொலிஸ்

குடும்பப் பகையே புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்னர். புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவியின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். அவர்கள் மூவரும் மாணவியின் உறவினர்கள் ஆவர். பொலிஸாரின் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்...

புங்குடுவுதீவு மாணவி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலையில், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்!

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதேவேளை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகளும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி...

இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை...

யாழில் மீன் மழை

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (14) மாலை மீன் மழை பொழிந்துள்ளது. நல்லூர் அம்மன் கோவில் பிரதேசத்திலும் பருத்தித்துறை விதியின் சில பகுதிகளிலுமே இந்த மீன் மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொட்டும் மழையிலும் யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவு நாள் இன்று யாழ். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்பாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மேலும் குறித்த நினைவு நாள் வாரத்தை அனுஸ்டிப்பதற்காக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன் ,சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்....

கையெழுத்திட்டார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று பருத்தித்துறையில் இன்று யாழில்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் நேற்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று 15ம் திகதி யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு...

மே- 18 நினைவேந்தல் எம் உணர்வுகளால் உறவுகளுக்கு அஞ்சலி – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

கொத்துக் கொத்தாக எம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப்போரின் ஆறாத ரணங்களைச் சுமந்ததாக மீண்டும் எம் கண் முன்னே விரிந்துள்ளது இந்த வலி சுமந்த வாரம். இழப்புக்களையும் ஈவுகளையுமே நிலையாகப் பெற்ற எம் இனத்தை ஒரே வட்டத்துக்குள் அடக்கி, தொடர்கிறது அடக்குமுறை நெருப்பு. எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இன்றளவும் நியாயப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. இந்நிலையில்...

மே 18 இல் உறவுகளை நினைவுகூருங்கள்! – தமிழர்களின் கடமைக்கு தடை ஏதுமில்லை!!

"வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமையாகும், கடமையாகும்." - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது!

ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்ட காணாமல் போன யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றினை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த இரு தினங்களாக இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற வெகுசன ஊடக சீர்திருத்தங்கள் பற்றிய தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் நேற்று (14) கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்...

234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளர்களின் கீழ்

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று முதல் 234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார். 335 உள்ளூராட்சி சபைகளில் 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 65 உள்ளூராட்சி...

இறந்த தமிழர்களே நினைவுகூரப்படுகின்றனர்: இராணுவ வீரர்களும் நினைவுகூரப்படுவர்!

யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவுகூரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் ஊடகங்களில் செய்தி வெளியிடும்போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்ற நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் 19ம் திகதி இராணுவ வீரர்கள் நினைவுகூரப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்....

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது – இரா சம்பந்தன்

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ஆம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

இனி காமெடி வேடங்களில் நடிக்கத் தயார்: கதவை திறந்துவிட்ட வடிவேலு

வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் வடிவேலு பேசும்போது, இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக...

செல்வராகவன்-சிம்பு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன். நீண்ட நாள் இடைவேளைக்குப் பின், செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை குளோ...
Loading posts...

All posts loaded

No more posts