Ad Widget

வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு நடைபெறுகின்றது. வவுனியா நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்படும் அதேவேளை பரவலாக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நகருக்கு வரும் சில வீதிகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரப் பகுதியில் அமைதியான முறையில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை, பாடசாலைகள்,...

அரசியல் கைதிகள் குறித்த விபரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்கிறார் ஜனாதபதி!

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இல்லத்தில் நேற்று ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சர்வதேச தரப்பினர் தம் வசமுள்ள பல்வேறு பட்டியல்களை...
Ad Widget

யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்பவில்லை!, தொடர்கிறது பாதுகாப்பு

யாழ். நகர் மற்றும் நீதிமன்ற சூழலிலும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தொடர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இடம்பெற்ற வன்முறையினை அடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் 127 பேர் நேற்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா...

இதுவே கடைசியாக இருக்கட்டும் – ஆனந்தசங்கரி

புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரமான, மிருகத்தனமான சம்பவம் எமது நாட்டில் என் ஞாபகத்துக்கு எட்டிய வரையில் நடந்ததும் இல்லை, நான் கேள்விப்பட்டதும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எத்தனையோ ஆசைக் கனவுகளுடன் தமது பிள்ளைகளை சீராட்டி வளர்த்த...

நிலைமைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ் விஜயம்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி...

ஜனாதிபதி அவர்களுக்கு அனந்தி அவர்கள் கடிதம்!

இறுதிச்சமர் நினைவுதினத்தைமுன்னிட்டுவடமாகாணசபையின் உறுப்பினர் கௌரவஅனந்திசசிதரன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களின் விஷேட கவனத்திற்குமுன்வைத்தகோரிக்கைகளின் தமிழ் ஆக்கம் திகதி 18.05.2015 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதிசெயலகம் காலிமுகத்திடல் கொழும்பு-01 அதிமேதகு ஐயா! 2009 சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுஉயிர்பிழைத்துவாழும் வடக்குமற்றும் கிழக்குப் பிராந்தியமக்களின் நல்வாழ்வை உயர்த்தக்கோரும் பணிவானவேண்டுகோள். 18 வைகாசி 2009ம் ஆண்டுஎன்றுமுடிவடைந்தயுத்தத்தால் குறிப்பாக வடக்குமாகாணத்தில் ஏறத்தாழ ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம்...

யாழில் கடையடைப்பு போராட்டம்

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி  படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாணவியின் கொலைக்கு நீதி வேண்டுமென கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து கஸ்தூரியார் வீதிச் சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8...

பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளியேன் – ஜனாதிபதி

பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறையில் நடைபெற்ற 6ஆவது வெற்றிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த...

புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிப்பு!

பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ள புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிக்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை மாலை புங்குடுதீவுப் பகுதியில் உள்ள சந்தேகநபர்களின் வீடுகளே பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் இருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறு கூறிய பொதுமக்கள் அவர்களில் வெளியேறியதும் வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் சுவிஸிலிருந்து வந்த சந்தேகநபர் தங்கியிருந்த வீடும் மற்றும்...

முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை! தற்காலிகப் பின்னடைவையே சந்தித்துள்ளோம்!!

முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அது தற்காலிகப் பின்னடைவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகளை சந்தித்து அவர்களுடன், இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்விலேயே...

மாணவி கொலை – குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கக் கோரி பகிஸ்கரிப்புக்கு அழைப்பு!

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்யா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கக் கோரியும் வடமாகாணம் முழுவதும் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடகச் செய்தியில், காலம் காலமாக எமது உறவுகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும்,...

நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 88 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பெண் கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

பொன்னாலை வீதி கொத்தாத்துறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமானியம் யோகேஸ்வரி (வயது 34)...

உண்மைகளை சர்வதேசத்துக்கு கொண்டு வரவே தமிழர்கள் நீதியை கோருகின்றனர்

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18)...

மே18 நினைவு நிகழ்வுகள்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்! 2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் அவர்களும் வடமாகாண...

இளையவர் போராட்டத்தினை நக்கல் செய்யும் கனடா நக்கீரன்!

சில தினங்களுக்கு முன்பாக    புங்குடுதீவில்  பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படட சம்பவத்திற்கு கண்டணம் செலுத்தும் முகமாக சமூகவலைத்தளம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட  வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்  17.5.2015 காலை 11 மணியளவில் நல்லுார் கந்தசுவாமி கோவில் முன்பாக நடைபெற்றிருந்தது. இது தொடர்பாக பங்குகொண்டிருந்த ஒருவர் தனது படம்  உள்ள பகுதியினை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார்.அந்தப்பதிவுக்கு கனடா...

வவுனியாவிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு பகுதியில் கூட்டு வன்புனர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட 18 வயது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஒரு மணிநேரம் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன் ஒன்று கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 'அரசாங்கமே...

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

சென்னை மெரீனாவில் ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள்...

மூன்று தினங்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும்

இடை அயன ஒடுங்கல் வலயம், வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் தற்போது மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இது தற்போது நாட்டை கடந்து செல்வதால் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்று திருநெல்வேலி பிராந்திய வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் நேற்றய தினம் தெரிவித்தார். இடை அயன ஒடுங்கல் வலயமானது தற்போது...
Loading posts...

All posts loaded

No more posts