Ad Widget

இன்று யாழில் ஆர்ப்பாட்டம்?

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அ. பரம்சோதி தெரிவித்தார்.

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கோரி இருப்பதாகவும், பொலிஸார் அனுமதி வழங்கியதாகவும் குறிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும், அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப்பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Related Posts