Ad Widget

தந்தையின் கத்திக் வெட்டுக்கு இலக்காகிய மகன் வைத்தியசாலையில்

அச்சுவேலி தோப்புப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை தந்தையின் கத்திக் வெட்டுக்கு இலக்காகிய மகன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த ஜெயபரன் செந்தூரன் (வயது 24) என்பவரே கழுத்தில் வெட்டுக்காயம் பட்டு படுகாயமடைந்தார்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை இடம்பெற்ற வேளையில் அதனை தடுப்பதற்கு மகன் சென்றபோது, தந்தை கத்தியால் மகனை வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த மகன் முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை தலைமறைவாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts