Ad Widget

வாரியபொல யுவதிக்கு ஒரு நீதி!! வித்தியாவுக்கு இன்னுமொரு நீதியா!!

வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது.

Lady hit boy wariyapola

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.

பெண்ணொருவரை சொற்களால் இம்சை செய்தவருக்கு உடனடியாக நீதி வழங்கும் இலங்கை அரசு கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட வித்தியாவின் விடயத்தில் பாராமுகமாக உள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களவர்களுக்கு ஒரு நீதி ,தமிழர்களுக்கு ஒரு நீதியா?? என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

Related Posts