Ad Widget

காணாமற்போன குடும்பஸ்தர் மற்றும் அவரது 3 வயது மகன் பற்றி தகவல் கோருகிறது பொலிஸ்!

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: மற்றொரு சந்தேகநபர் கைதாகி விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என...
Ad Widget

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்...

மஹிந்தவுக்கு வாய்ப்பளித்தால் மைத்திரியின் நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லை – சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், அஅவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். அங்கு...

முன்னாள் போராளிக்கு பிணை

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த போது திங்கட்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை 75,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (07) அனுமதியளித்தார். அத்துடன், மேற்படி சந்தேகநபர் புனர்வாழ்வு பெற்றாரா, இல்லையா என்பது தொடர்பில் விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையான ஓகஸ்ட்...

ஓகஸ்ட் 5,6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

வடமாகாண வருமான வரித் திணைக்களம் திறந்துவைப்பு!

வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இன்று திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் இன்று புதன்காலை 9 மணியளவில் திறந்துவைக்கப்பட்டதுடன் அலுவலகப் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பிரதம செயலாளர் பத்திநாதன்...

கிளிநொச்சி இளம்பெண் வன்புணர்வு வழக்கு: தலைமறைவாகியுள்ள சிப்பாய்க்கு பிடியாணை! இன்ரர்போல் உதவியை பெறவும் உத்தரவு!!

கடந்த 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் எனக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிஸார் மூலமாக அவரைக் கைதுசெய்வதற்கு...

மாணவர் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர வேண்டும் -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. 'ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்' என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர...

இலங்கை கொலையை பெங்களூரில் நடந்ததாக பேஸ்புக்கில் வீடியோ ஷேர் செய்த தொழிலதிபர் கைது!

பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின்...

காணாமல்போனோர் குறித்து தேர்தலின் பின் அவதானிப்போம் – த.தே.கூ

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேற்படி கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்களுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில், வவுனியாவில் திங்கட்கிழமை (06) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது,...

கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க ஊடுருவல் – பா.அரியநேத்திரன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக...

வடக்கில் போட்டியிடுவதற்கு முக்கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு...

க.பொ.த பரீட்சை விண்ணப்பங்களில் மாற்றம்

விண்ணப்பதாரர்களின் வசதி கருதி கல்வி பொதுத் தராதர உயர்தர விண்ணப்பங்களில் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்காக 3 விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். அதற்கமைய விண்ணப்பங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம், எப்பிரிவில் தோற்றவுள்ளனர் மற்றும் பரீட்சை இலக்கம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்....

யாழ் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்!

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இம் முறை யாழ் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47...

மீசாலையில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சாவகச்சேரி - மீசாலை மேற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கையாலபிள்ளை உதயநாதன் எனத் தெரியவந்துள்ளது. நேற்றயதினம் காலை 07.30 அளவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, பின் வீடு திரும்பியவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காலை...

குடும்பத்தாரின் காலை உணவிற்காக 9.4 மில்லியன் செலவிடப்பட்டதா? மஹிந்த பதில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாரின் காலை ஆகாரத்திற்காக 9.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக வௌியான தகவல் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட ஒன்று என, அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினர் வௌியிட்டுள்ள அறிக்கையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் ஹில்டன் ஹோட்டலில் இருந்து ஒரு வேளை உணவை பெற்றுக் கொள்ள 9.4...

த.தே.கூ தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள...

திருடனை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்: திருட்டுப்போன நகைகள் திரும்பின

கடந்த சனிக்கிழமை(04) திருட்டு போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பருத்துறைய பகுதியில் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் இருந்து 35 பவுண் நகையினை திருடி சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

பாகிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் சமநிலையில் இருந்த இரு அணிகளும், கடந்த மூன்றாம் திகதி மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில்...
Loading posts...

All posts loaded

No more posts