Ad Widget

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் மதுபானசாலைகளை மூடுவதுடன் பல்பொருள் அங்காடி நிலையங்களில் இடம்பெறும் மதுபான விற்பனைகளையும் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

Related Posts