Ad Widget

கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவில்லை: தமிழரசு கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின்...

ஆசனப்பங்கீடு : த.தே.கூ. பங்காளிக்கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும்!

வடக்கு – கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் வரும் 21 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியாகும். இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர் நேற்றிரவு...
Ad Widget

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக வித்தியாதரன் போட்டி??

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன. தமிழர்...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெப்ரவரி 10!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர...

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...

யாழ். உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்!

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது. சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...

ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் : மணிவண்ணன் கோரிக்கை

ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை நேற்று (13.12.2017) புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாக்கல் செய்தனர். சாவகச்சேரி...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது : கருணா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வாழைச்சேனை பிரதேச சபைக்காக நேற்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை!! தனித்து இறங்கியது வரதர் அணி!!

ஈபிஆர்எல்எவ் பத்மநாப அணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்காத நிலையில் தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், நேற்று பிற்பகல் வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்...

சுரேஸ் இல்லாமலே ஜெயிப்போம்!! : எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து...

யாழ்ப்பாணத்தில் போட்டியிட ஏழு கட்சிகள் தயார்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை கட்டியுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளிற்கும், சிறிலங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஆகியன சாவகச்சேரி நகரசபைக்கும்,...

‘யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி...

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

’உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பகிஸ்கரிப்போம்’ : காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள்

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (08) 292ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்து...

தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமஉரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிந்தன....

உதயசூரியன் சின்னத்தில் புதிய அணி

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சின்னமான உதயசூரியனின் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றள்ளன. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்...

கூட்டமைப்பின் புதிய தலைமுறை தேர்தலை எதிர்கொள்ளும்: மாவை சேனாதிராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வினைத்திறன்மிக்க இளைஞர்களை களமிறக்கவுள்ளதாகவும் பலமான அணியாக களமிறங்கும் எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பாக தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை யாழ். மார்ட்டின்...

கதிரைப் பங்கீட்டில் தமிழரசுக்குள் குடுமிச் சண்டை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பானது...
Loading posts...

All posts loaded

No more posts