Ad Widget

யாழ். உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்!

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலிவடக்கு முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் யாழ் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றனர்

Related Posts