Ad Widget

செப்ரெம்பர் 7ல் வடக்கு தேர்தல்?

வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வெற்றியீட்டும்!- புலனாய்வுப் பிரிவு

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
Ad Widget

கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவு:-கஜேந்திரகுமார்

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத்தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – பொன்சேகா!

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுங்கள்!- டக்ளஸ் தேவானந்தா

நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு (more…)

வட மாகாணசபைத் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம்!- சுமந்திரன்

வட மாகாணசபைத் தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்குத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அரசுடன் இணைந்தே போட்டியிடும் : பஷில்

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் (more…)

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிடையே சந்திப்பு...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டளஸ் பகிரங்க அழைப்பு

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது...

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க மும்முரம்!

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய...

கிழக்குத் தேர்தல் இன்று தமிழ்க் கூட்டமைப்பு – மு.கா. – அரச தரப்பு மும்முனைப்போட்டி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இங்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கும் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவிற்காக...

கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள்

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால்...