Ad Widget

ஆசனப்பங்கீடு : த.தே.கூ. பங்காளிக்கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும்!

வடக்கு – கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் வரும் 21 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியாகும்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர் நேற்றிரவு 7 மணி முதல் சுமார் 2 மணிநேரம் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு யாழ். மார்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில், யாழ். மாநகர சபை மற்றும் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்குமான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூட்டத்திலிருந்து இடைநடுவே வெளியேறினார்.

இந்த நிலையில் எந்த ஆசனப் பங்கீடுகளும் இறுதி செய்யப்படாமலேயே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நேற்றைய கூட்டம் நிறைவடைந்தது. எனவே, இன்றும் பேச்சுக்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts