Ad Widget

யாழ்ப்பாணத்தில் போட்டியிட ஏழு கட்சிகள் தயார்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை கட்டியுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளிற்கும், சிறிலங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஆகியன சாவகச்சேரி நகரசபைக்கும், கட்டுபணத்தை செலுத்தியுள்ளன.

இதேபோன்று மக்கள் விடுதலை முன்னனியானது சாவகச்சேரி, வலிமேற்கு, நல்லூர் ஆகிய பிரதேசபைகளுக்கும் மற்றும் யாழ்.மாநகர சபைக்குமாக கட்டுபணத்தை செலுத்தியுள்ளது. சுயேட்சை குழுவொன்று வலிமேற்கு பிரதேச சபைக்கு மாத்திரம் கட்டுபணத்தை செலுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுபணத்தினை எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் எனவும் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் எனவும் யாழ்.மாவட்ட செயலக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Posts