Ad Widget

தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமஉரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

முன்னுரை

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

  1. பெயர் : தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே. (Tamil National Council – T.N.C.)
  2.  இலக்கு: மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016ஆந் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த் தேசியப் பேரவை) செயற்படும்.
  3. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்
  4. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பேரவை (Tamil National Council – T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.
  5.  இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும்.

மேற்படி விடயங்களை வாசித்து விளங்கிக்கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.

Related Posts