Ad Widget

கட்டுப்பாட்டை மீறினால் பதவி பறிக்கப்படும் – மாவை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச...

யாழ். மத்திய கல்லூரியை சூழவுள்ள வீதிகளை பயன்படுத்த தடை ; பொலிஸ் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர ஏனையவை செல்ல அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்ட வாக்குகளை எண்ணும் நிலையமாக இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 8,9 ஆம்...
Ad Widget

2014–ல் கலக்கிய படங்கள்

2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த படங்களின் மொத்த முதலீடு ரூ. 1100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் குறைவான படங்களே வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டியுள்ளன. நிறைய படங்கள் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களை...

மக்களின் நிலங்களை மக்களுக்கே பெற்றுகொடுப்பேன் – டக்ளஸ்

'எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கு சொந்தம். அந்தவகையில் ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த கணிசமான காணிகளை கமச்செய்கைக்காக பெற்றுக்கொடுத்துள்ளேன். எனவே மீதமிருக்கும் எமது மக்களின் நிலங்களையும் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அதற்கு நானே பொறுப்பு' என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சாவகச்சேரி தென்மராட்சி...

மஹிந்த அரசை வெளியேற்றவே, மைத்திரிக்கு ஆதரவளிக்கின்றோம் – சூசையானந்தன்

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசுடன் சேர்ந்திருந்து செயற்படும் போது தமிழ்மக்களுக்காக ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்பதை நாம் மறக்கவில்லை. ஆனால், மஹிந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியுள்ளதால், நாங்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன் இன்று வியாழக்கிழமை (01) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடமாகாண மாணவர்கள் கௌரவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...

நாவாந்துறையில் குழு மோதல் : இராணுவம் பொலிஸ் குவிப்பு

யாழ்.நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட முறுகலே குழுச்சண்டையாக மாறியுள்ளது. சந்தியின் அருகிலுள்ள கடைகளின் வெளியில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப் போத்தல்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்ததால், 5 பேர் காயமடைந்து அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை...

த.தே.கூ.வின் முடிவு, முரணான பலனையே தரும் – ஆனந்தசங்கரி

விளைவுகளை பற்றி சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் தலையிடாமல் தமிழ் மக்களை சுயவிருப்பத்துக்கமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளுக்கு முரணாக, ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை துரதிஸ்டமானதாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் ஆனந்தசங்கரியால் புதன்கிழமை...

14 மாத அனுபவத்திலிருந்து புதியது புனைவோம்! வடக்கு முதலமைச்சர்

மத்திய அரசானது மாகாணத்தை மடக்கி ஆள முடியும் என்பதை உணர்த்துவதாக எமது 14 மாத அனுபவங்கள் அமைந்துள்ளன. வடமாகாண மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் மத்தியின் மதிப்பு தன்பால் இருப்பதால் தொடர்பில்லாதவரைக் கூட்டத்திற்குக் கொண்டு வந்து ஒவ்வாத நடவடிக்கைகள் இடம்பெற இடமளித்தார். இவை யாவும் “கருடா சௌக்கியமா?” என்ற கலாசாரத்தையே முன்னிறுத்துகின்றது. இதுதான்...

வடக்கு மக்களின் வாக்குகளை வேட்டையாட 2,000 இராணுவத்தினர் களத்திலாம்!

இரண்டாயிரம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன. கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட...

ஹக்கீமும், சம்பந்தனும் கேட்பதை கொடுக்கலாமா? மக்கள் தீர்மானிக்கட்டும் – ஜனாதிபதி

யுத்தம், ஆயுதம்தான் நல்ல வியாபாரம். அந்த வியாபாரத்தை நாம் நிறுத்திவிட்டோம். 30 வருட யுத்த்ததை 4 வருடங்களில் முடித்து மரண பயத்தை இல்லாதொழித்தோம். நாட்டை ஒன்றிணைத்தோம். சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமும் கேட்பதைக் கொடுக்க முடியுமா? மக்களாகிய நீங்களே தீர்மானியுங்கள். - இவ்வாறு தெரிவித்தார் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ என்றதும்...

ஜனாதிபதித் தேர்தல்: விதிமீறல்கள் இருமடங்காக உயர்வு

தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி....

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் சென் யி சதுக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். புத்தாண்டு பிறக்க அரை மணி நேரம் இருந்தபோது, திடீரென கூட்ட நெரிசல்...

மதிநுட்ப சிந்தனை வழி நின்று பிறக்கப் போகும் புத்தாண்டை எமது இலக்கு நோக்கி சரிவரப் பயன்படுத்துவோம் – டக்ளஸ்

பிறக்கின்ற புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும் சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிறந்துவரும் ஒவ்வொரு புத்தாண்டினையும்,...

புத்தாண்டு பிறந்து சில மணிநேரத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர்!

புத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார். தையல் கடையில் பணிபுரியும்...

முக்கியமான ஒர் சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது – ரணில்

எதிர்கால தலைமுறையை கருத்திற்கொண்டு புத்திசாதூரியமான தீர்மானங்களை புத்தாண்டில் மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தாய் நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பாரதூரமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக பொது மக்கள், புத்தாண்டில் மதிநுட்பமான தீர்மானத்தினை மேற்கொள்ளவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நாம் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். போர்...

மகிந்தவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றால் மட்டுமே சமுர்த்திப் பணம்!

யாழில் இடம்பெறும் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கே 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் உச்சம் அடைந்துள்ளன. இந்த நிலையில் பரப்புரைக் கூட்டத்தினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் வருகைதரவுள்ளார். எனவே மகிந்த பங்கேற்கும்...

தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்க மாட்டேன் – ரவிகரன்

தமிழ் மண்ணிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரிக்க மாட்டேன் என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எங்கள் மண்ணில் வரலாறு அதற்கு முன் கண்டிராத சுமார் 5...

புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் : கூட்டமைப்பு நம்பிக்கை

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது....

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு! வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு!

கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒருசேர ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். மலரும் புதிய ஆண்டில் எனது இந்த கூற்று உண்மை என சந்தேகமற நிரூபிக்கப்படும். இந்த...
Loading posts...

All posts loaded

No more posts