Ad Widget

நாவாந்துறையில் குழு மோதல் : இராணுவம் பொலிஸ் குவிப்பு

யாழ்.நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட முறுகலே குழுச்சண்டையாக மாறியுள்ளது.

சந்தியின் அருகிலுள்ள கடைகளின் வெளியில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப் போத்தல்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்ததால், 5 பேர் காயமடைந்து அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts