Ad Widget

முக்கியமான ஒர் சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது – ரணில்

எதிர்கால தலைமுறையை கருத்திற்கொண்டு புத்திசாதூரியமான தீர்மானங்களை புத்தாண்டில் மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Ranil_Wickramasinghe

தாய் நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பாரதூரமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக பொது மக்கள், புத்தாண்டில் மதிநுட்பமான தீர்மானத்தினை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக நாம் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம்.

போர் காரணமாக உடைந்து போயுள்ள சமுக தொடர்புகளை மீளக் கட்டியெழுப்பி புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் சவால்கள் அதில் முக்கியமானவையாகும்.

எனவேதான் நாட்டின் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதும் தீர்மானம் மிக்கதுமான ஒர் சூழ்நிலையில் 2015ம் ஆண்டு மலர்ந்துள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts