Ad Widget

நீதி, நியாயமான எதிர்காலத்துக்காக தமிழ்பேசும் மக்கள் மைத்திரியின் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்!

"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட...

கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சராகி எதையும் சாதிக்க முடியாது: சிவாஜிலிங்கம்

தேசிய அரசாங்கத்தை அமைத்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் அமைச்சர்களாவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தே ஆதரவளிக்க வேண்டும் என  வடமகாண சபை  ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
Ad Widget

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் சனிக்கிழமை (03) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – டக்ளஸ்

எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமன்றி அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே எமது அரசியல் நிலைப்பாடாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (03)...

த.தே.கூ. முகவர்களை தெரிவு செய்கிறது

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களை தெரிவு செய்வதில், த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கான, முகவர்களைத் தெரிவு செய்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈழமக்கள்...

பாடசாலைகளுக்கு நிதியுதவி

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்கல்லூரி உட்பட ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார். மிருசுவில் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கரவெட்டி கட்டவேலி அ.மி.த.க பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும்...

நாவாந்துறையில் குழு மோதல்: 9 பேர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர். யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

முடிந்தளவுக்கு மஹிந்தவை தோற்கடிப்போம் – கஜதீபன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் முடிந்தளவுக்கு தோற்கடிக்கவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். பொது நிறுவனங்களின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவு கூட்டம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்

யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். இதன்போது யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தொண்டராசிரியர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியிருந்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

தேர்தல் விதிமுறைகளை மீறி யாழில் வீடுகளை கையளித்தார் நாமல்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நாமல் ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நாமல் ராஜபக்ச இன்று குறித்த வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களில் பண்டத்தரிப்பு பல்லசுட்டி பகுதியில் வசித்து வரும் 20 பேருக்கு வீடுகளைக்...

அமெரிக்காவில் விழுந்த விமானம்; 4 பேர் பலி, உயிர்தப்பிய சிறுமி

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 7 வயதுச் சிறுமி அதிசயிக்கத் தக்க வகையில் உயிர் தப்பியுள்ளாள். விமானம் விழுந்த இடத்தில் இருந்து அருகிலுள்ள வீடொன்றுக்கு நடந்து சென்ற அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் சிதிலங்கள் காட்டுப் பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. விமானியும்...

போகோ ஹராமால் 40 பேர் கடத்தப்பட்டதாக சந்தேகம்

நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த...

ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது. அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில்...

அலைபாயுதேயின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் – பி.சி.ஸ்ரீராம்

மணிரத்னம் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ் நடிப்பில் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தவேளை மணிரத்னம் எடுத்த படம், அலைபாயுதே. மாதவன், ஷாலினி நடித்த அப்படத்துக்கும் பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராவணன்,...

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் பொலிஸார் திடீர் தேடுதல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அவ்வாறான பிரசுரம்...

மைத்திரி குழுவினர் கூட்டமைப்பினரை யாழில் சந்தித்தனர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை மு.ப.11 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மைத்திரி குழுவினருடனான இந்தச் சந்திப்பில்...

மறைக்கப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டன

தேர்தல் விதிமுறைக்கமைய யாழ்ப்பாணப் பொலிஸாரால் மறைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள், ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த வேளையில் மறைப்பு எடுக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், செல்வா சதுக்கம் அருகில், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில், பலாலி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

தேர்தல் பிரசார கூட்டத்தில் கைகலப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நீலப்படையணிக்கு வழங்கப்படும் உடையை பகிர்ந்தளிக்கும் போதே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது....

ஜனாதிபதி மஹிந்தவை ஏசிய வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர்

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஏசுவதாக நினைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏசிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தர தாமதமாகியதால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை...

ஏர் ஏசியா விமான விபத்து: 2 விமான பாகங்கள்- 46 உடல்கள் மீட்பு

கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது....
Loading posts...

All posts loaded

No more posts