Ad Widget

தேர்தல் விதிமுறைகளை மீறி யாழில் வீடுகளை கையளித்தார் நாமல்

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நாமல் ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.

Namal-rajabaksha

தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நாமல் ராஜபக்ச இன்று குறித்த வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.

கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களில் பண்டத்தரிப்பு பல்லசுட்டி பகுதியில் வசித்து வரும் 20 பேருக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளை இன்று நாமல் ராஜபக்ச உரிமையாளரிடம் வழங்கிவைத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் எட்டாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்பது தேர்தல் விதிமுறை. எனினும் தேர்தல் விதிமுறையினை நாமல் ராஜபக்ச மீறி வீடுகளை கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts