Ad Widget

மறைக்கப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டன

தேர்தல் விதிமுறைக்கமைய யாழ்ப்பாணப் பொலிஸாரால் மறைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள், ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த வேளையில் மறைப்பு எடுக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், செல்வா சதுக்கம் அருகில், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில், பலாலி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மறைப்புச் செய்யப்பட்டன.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்தார்.

அதன்போது, மறைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைத்தும் மறைப்பு விலக்கப்பட்ட நிலையில் இருந்தமையை காணமுடிந்தது.

Related Posts