Ad Widget

புத்தாண்டு பிறந்து சில மணிநேரத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர்!

புத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார்.

தையல் கடையில் பணிபுரியும் குறிப்பிட்ட இளைஞர் நள்ளிரவு வரை கடையில் பணிபுரிந்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய வேளையில உறவினாகளுக்கு இடையே சண்டை இடம் பெற்றதாகவும் இந்த நேரத்தில் குறிப்பிட்ட இளைஞருக்கும் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிபழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் இன்று அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Related Posts