“போருக்குப் பின்னரான அபிவிருத்தி” ஆய்வு மாநாடு எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைகழத்தில் நடாத்த ஏற்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை பல்கலைக்கு வெளியே நடாத்துவதற்கு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில், போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளதாகவும் மற்றய அமர்வுகள் திட்டமிட்டபடி பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆடி அமாவாசைக்காக திருநெல்வேலி சந்தையில் அலைமோதும் கூட்டம்

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதத்தை கொண்டாடுவதற்காக மரக்கறி வகைகளை வாங்குவதற்காக திருநெல்வேலி சந்தையில் அலை மோதுகின்றது மக்கள் கூட்டம். புதுச்சட்டி புதுப்பானைகளில் சோறாக்கி கறி சமைப்பதற்காக குவிக்கப்பட்டிருக்கும் சட்டி பானைகள் ஆடி அமாவாசை  தினத்திற்காக மட்டும்   ஒரிரு நாட்களே விற்பனைக்கு வரும் காத்தோட்டிக்காய் எனப்படும் காய்கள் விற்பனைக்கு வருவதை அவதானியுங்கள்.
Ad Widget

யாழ். மாநகர முதல்வரின் தலையில் துப்பாகி வைத்து மிரட்டியமை தொடர்பாக வழக்கு விசாரணை

யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளர் அங்கஜனுக்கு எதிரான வழங்கு திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. (more…)

நடைபாதை வியாபாரத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு தடை; தென்பகுதி வர்த்தகரின் ஆதிக்கம் மாநகர சபை பாரபட்சம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக்குச் செல்லும் பிரதான வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் பொதுமக்க்ள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்து பெருமளவான தென்பகுதி வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். (more…)

ஆளுநர் சந்திரசிறிக்கு மாரடைப்பு ! அவசரமாக கொழும்புக்கு!

வடமாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அவசர அவசரமாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். (more…)

யாழில் 30 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக திரைக்கு வருகிறது சிங்களத் திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக  சிங்களத் திரைப்படம் ஒன்று இம் மாதம் வெளியிடப்படவுள்ளது. (more…)

அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட ஸ்ரீல.மு.கா அதியுயர் பீடம் மீண்டும் அங்கீகாரம்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இரண்டாவது தடவையாக இன்று வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஆரம்பமானது. இதன்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

திருமலையில் த.தே.கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (16)தாக்கல் செய்தது. கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார்.திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு: (more…)

சிசுவை விற்பனை செய்த தாய் கைது

பிறந்து நான்கு நாட்களேயான ஆண் சிசுவை 2000ரூபாவுக்கு விற்பனை செய்த தாயினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ் சம்பவம் யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குடும்ப வறுமை காரணமாகவே சிசுவை தாய் விற்பனை செய்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக யாழ் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

கைதடியில் மீள புனரமைக்கப்பட்ட பனை ஆராய்சி நிலையம் எதிர்வரும் 20 ம் திகதி திறப்பு

கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்ட  பனை ஆராய்சி நிலையம் எதிர்வரும் 20ம்திகதி  திறந்து வைக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். (more…)

புற்றுநோய் தொடர்பாகச் சிகிச்சையளித்து பொது மக்களிடம் வாங்கி கட்டிய வைத்தியர் சாவகச்சேரியில் சம்பவம்

புற்றுநோய் கிளினிக்கிற்கு சென்ற  நோயாளிகளுக்கு சம்பந்தமில்லாமல் மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையி்ன் பொறுப்பு வைத்தியர் வைத்திய கலாநிதி ரி.குகதாஸின் செயற்பாடுகளால் நோயாளர்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர். (more…)

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்

சமூக சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக யாழ். மாவட்ட முன்னாள் செயலாளர் இமெல்டா சுகுமார் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சுக்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இவருக்கும் நியமன கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம்

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவுசெய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. (more…)

வரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்!

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் யார்? உறுதிப்படுத்தியது அரச சேவைகள் ஆணைக்குழு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வேணுகா சண்முகரத்தினம், அதிபர் தராதரத்திலிருந்து அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்கு இடையூறாகச் செயற்படின், ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி றாஜினி முத்துக்குமாரனுக்கு அரசசேவைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது....

கல்கோவன்,றுக்ஸ்மன் அதிரடி யாழ்.இந்து வரலாற்று வெற்றி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. (more…)

நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம்

நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது சிவாஜிலிங்கம் சார்பாக என்.சிறிகாந்தா, எம்.றெமிடியஸ், என்.திருநாவுக்கரசு, வி.ரி. சிவலிங்கம், கே.பி.எஸ். வரதராஜா, ஏ. ராஜரெட்ணம், சர்மினி விக்னேஸ்வரன், எஸ். செலற்றின்,...

என்.ஆர்.எவ்.சி. மற்றும் ஆர்.எவ்.சி. கணக்கு விதிகளில் தளர்வு

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது. (more…)

சரத் பொன்சேகா விரைவில் யாழ்ப்பாணம் விஜயம்

முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவருமான சரத்பொன்சேகா யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். (more…)

யாழ். பொக்கணை மயானக் காணியை படையினருக்கு வழக்க முடியாதென வலி. கிழக்கு பிரதேச சபை தீர்மானம்

யாழ். ஊரெழு பொக்கணை மயானத்திற்குரிய நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென, வலி. கிழக்கு பிரதேச சபை திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், பிரதேச சபையின் எல்லைக்குள் படையினருக்கு நிலம் வழங்க கூடாதென தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.மேற்படி மயானத்திற்குரிய 130 ஏக்கர் பரப்பு நிலத்தினை தமது படைமுகாம் அமைப்புக்கென வழங்குமாறு இராணுவத்தினர், பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த இடம்...
Loading posts...

All posts loaded

No more posts