- Sunday
- April 5th, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரியச் செயல். இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற-அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)
பொன்னாலை - திருவடிநிலையில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள சிறியளவு கரையோரப் பகுதியிலும் கடற்றொழிலில் ஈடுபடக்கூடாதென கடற்படையினர் உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். (more…)
இலங்கையின் வடக்கில் இருந்து படையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில்அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றது.நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் தற்போது செயற்பட்டு...
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (more…)
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்து ஊழியர் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 27ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கெண்டதைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்கள் அரைநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். (more…)
38ஆவது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழா எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மூன்று தினங்களாக கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. (more…)
வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் கடந்த காலத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடகக் குரல் இந்த நடவடிக்கை ஐனநாயக விரோத நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளது. (more…)
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். (more…)
உதயன் ஆசிரியரைத் தாக்கியவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (more…)
வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். (more…)
தொற்றுநோய் அல்லாத நோய்களினால் இறப்புக்கள் அதிகரிப்பதாக புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.மருத்துவ சங்கத்தின் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)
இராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அவளைச் சுற்றி அசுரர் கூட்டம். கூடவே வேல், அம்பு, ஈட்டி என்ற ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருத்தனர். திரிசடை என்பாளைத் தவிர மற்றெல்லோரும் சீதையைப் பயமுறுத்துபவர்களே. (more…)
மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புலனாய்வுப்பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts






