கைதாவோர் தொடர்பில் இனி குடும்பத்தவருக்கு அறிவிக்கப்படும்;; எரிக் பெரேரா

யாழ். மாவட்டத்தில் இனிமேல் யாராவது கைது செய்யப்படின் அதற்கு முன்னர் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாகவே தெரியப்படுத்தப்படும். அதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?: இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ராசகுமாரனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்துள்ளது. (more…)
Ad Widget

குருநகர் பகுதியில் வாள் வெட்டு: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அரியாலை மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச்சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் (more…)

யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் சனிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். ஹலோ ஸ்ரெட் எனப்படும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற நற்குணராஜா சாரங்கன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். (more…)

டெங்கினால் சுழிபுரம் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பராளை வீதியச் சேர்ந்த தர்ஷிகா (வயது 11) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூளாய் வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையிலேயே இந்த மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல்கலை மாணவிகளுக்கு தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பொலிஸார் அழைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். (more…)

பல்கலை. ஆசிரியர் சங்க தலைவரிடம் விசாரணை; மூன்றரை மணிநேரம் நடந்தது

மாவீரர் வாரத்தில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் தொடர்பிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் மூன்றரை மணி நேரம் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர் என்று, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். (more…)

இலங்கை நிப்போன் கல்வி, கலாசார நிலையத்தினால் 41 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

இலங்கை நிப்போன் கல்வி, கலாசார நிலையத்தினால் 41 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்றுக யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.சுமார் 5000ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன. (more…)

பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் வாள் வெட்டுக்கு இலக்கானதை கண்டித்து (more…)

யாழில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு (more…)

‘சார்க்’ கட்டுரைப் போட்டியில் யாழ்.இந்து மாணவர்கள் 1ம் 2ம் இடங்களைத் பெற்றனர்

‘சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் சிறிஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரி முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா சஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். (more…)

சூட்டுப் பயிற்சியால் மீனவருக்கு உயிராபத்து

தென்மராட்சி அல்லாரை தம்பு தோட்டப் படைமுகாமில் தினமும் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியினால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கும் அச்சத்துடன் படகுகளில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. (more…)

2009க்கு பின் குடியேறியோருக்கே இந்திய அரசின் வீட்டுத்திட்டம்; செயலகக் கூட்டத்தில் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம் அடுத்த கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இவர்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் 10 இற்கு மேல் பெற்ற வறுமையானவர்களுக்கே வீட்டுத் திட்டப் பணம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது. (more…)

பிள்கைளை விடுதலை செய்யுமாறு யாழ். கட்டளைத் தளபதியிடம் பெற்றோர் கோரிக்கை

கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். (more…)

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததனாலேயே புலிகள் உருவாகினர்! ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி

தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். (more…)

யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

அச்சுறுத்தலினாலேயே மருத்துவ பீட கற்றல் முன்னெடுக்கப்படுகின்றது: எம்.பி சிறிதரன்

யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கல்விச் செயற்பாட்டினை புறக்கணிக்கும் நிலையில் மருத்துவ பீடம் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வது அச்சுறுத்தலின் காரணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

இராமாவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிப்பு

கொடிகாமம், அல்லாரை, இராமாவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரந்த காணி நேற்று அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க நேற்று மதியம் 3 மணியளவில் இந்தக் காணியை கையளித்தார். (more…)

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழில் கைது

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத மது உற்பத்தி செய்த நபர் ஒருவரும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு பேரும், (more…)

புனர்வாழ்வு இன்றி மாணவரை விடுவிக்குக – மாவை

கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts