பல்கலைச் சூழலில் மேலும் இராணுவப் பிரசன்னம்; அச்சத்தில் விடுதி மாணவர்கள்

பல்கலைக்கழக சூழலில் படையினரின் பிரசன்னம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.பல்கலைக்கழகம் மற்றும் விடுதிச் சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதனால் விடுதியில் உள்ள மாணவர் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளது. (more…)

மாணவர்கள் கைதாவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். பொலிஸாரிடம் பல்கலை நிர்வாகம் கோரிக்கை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4பேர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை நிறுத்தல் வேண்டுமென யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
Ad Widget

பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்

இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன் வைக்காதவரை இந்த நாட்டில் அமைதியும் நிம்மதியும் ஏற்படப் போவதில்லையயன்பது நிறுத்திட்டமான உண்மை. விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி என்பது தற்காலிகமான ஒரு விடயம். இனப் பிரச்சினைக்கான தீர்வென்பது விடுதலைப் புலிகளுடன் மட்டும் தொடர்புபட்டதாயின் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததோடு அந்தப் பிரச்சினை நின்று போய் இருக்கும். (more…)

அனைத்து பீட மாணவர்களும் காலவரையறையின்றி வகுப்புப் புறக்கணிப்பு

கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரை கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் நேற்றைய தினமும் இன்றும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களான தர்ஷானந், தர்ஷன், ஜெகத்மேனன், சொலமன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை அனைத்து பீட மாணவர்களும் கால...

பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.- டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள...

படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்! -வலம்புரி ஆசிரியர் தலையங்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்.இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது.ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)

மாணவர் விடுதலையில் சர்வதேச அழுத்தம் தேவை: கஜேந்திரகுமார்

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். (more…)

மாணவர்களை விடுதலை செய்யாவிடில் பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

பல்கலை மாணவர் கைது தொடர்பில் ஜேவிபி, முன்னிலை சோஷலிச கட்சியினரிடம் மனோ கணேசன் கோரிக்கை!

பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் உள்ளிட்டயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதே இவர்கள் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு ஆகும். இது தொடர்பிலேயே கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வன்முறை பதட்டநிலை நிலவியது. (more…)

எதிர்க்கட்சிக்கு எதிராக உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ‘றெமீடியஸ்’ -யாழ் மாநகரசபையில் சம்பவம்!

அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? என யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை மீது எதிர்க்கட்சித்தலைவர்...

யாழ். பல்கலைக்கழக தாக்குதலுக்கு புதிய ஜனநாயக மாக்சிச கட்சி கண்டனம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து இராணுவமும் பொலிஸாரும் நடத்திய இரண்டு நாள்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு!

கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவர்கள் இருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். (more…)

கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; த.தே.கூ பொலிஸாரிடம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

கூட்டமைப்பும் தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)

வன்னியில் கைவிட்ட வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து விற்பனை; படையினர் ஏலத்தில் விற்றதாக கூறுகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் இராணுவத்தினரால் ஏலவிற்பனை மூலம் விற்கப்பட்டு வருகின்றன என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. (more…)

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட வேலைத்திட்டம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேசச சபை தவிசாளர் பிரகாஸ் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக்கழக தாக்குதலுக்கு ”நாம் தமிழர்” கண்டனம்

இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

தம்பி ‘டீ’ இன்னும் வரல – நையாண்டிப் புலவர்

-நன்றி நியு யப்னா இணையம் - தமிழீழம் எமக்கு வேண்டும். இன்னும் ஆயிரம் சிவகுமார்கள் இந்த பூமியில் எழுவார்கள் என அந்த நேரம் எங்கட அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையக்கரசியார் சொன்னார். கடைசியில் அமிர்தலிங்கம் உசுப்பேற்றி விட்டு அந்த உசுப்பேற்றல் புயலில் சிக்குப்பட்டு மரக்கொப்பில் இருந்து மரம் தறிச்சது போல தான் தோண்டிய குழியில் மூடுப்பட்டு உயிரிழந்தார்....

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள் பற்றாக்குறை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸுடன் இணைந்து வைத்தியசாலையில் கடமையாற்றும் தொண்டர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சென். ஜோன்ஸ் அம்புலன்ஸின் யாழ்.மாவட்ட ஆணையாளர் செ.செல்வரஞ்சன் தெரித்துள்ளார். (more…)

யாழ் கோட்டைக்குள் வரலாற்றுச் சிறப்புக்கள் அடங்கிய கண்காட்சிக்கூடம்

வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் சுற்றுலாப்பயணணிகள் அறிந்து கொள்ளும் வகையில் யாழ் கோட்டைக்குள் கண்காட்சி கூடம் அமைக்கப்படவுள்ளது.தொல்லியல் திணைக்களத்தால் இக் கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts