- Monday
- May 6th, 2024
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மதிய...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையில், 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, அதற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்று அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே எமது அரசியல் இலக்கு. இதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையும். இதையே நான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் தொடக்கம்...
மத்திய அரசால் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் ஆறாவது இடத்தில் இருப்பதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.விமலசேன புதன்கிழமை (17) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததுடன் சிலர்...
யாழ்.நகரிலுள்ள 3 பிரபல நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அத்திணைக்களத்தை சேர்ந்த ஐவர், புதன்கிழமை (17) திடீர் சோதனை மேற்கொண்டதாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந் நிறுவனங்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி சேகரிக்கப்படாமை,...
வடமாகாண பேரவை செயலகத்துக்கு அதிகப்படியான வசதிகள் செய்யவேண்டியிருப்பதால் அதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17)...
தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சட்ட அமுல்படுத்தலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3 திகதி...
யாழ்.கெருடாவில் மாயவனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை புதன்கிழமை (17) முதல் காணவில்லையென சிறுமியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடுப்பிட்டியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லையென சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சில குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான...
ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு தலையிடாது தமிழ்மக்களை அவர்களது விருப்பப்படி வாக்களிக்க விடவேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்திக் கேட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...
2012ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி பகுதியில், 1560 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(17) அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1984ஆம் ஆண்டு 13ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஒளடதங்களை கடத்தும் தடுப்புச் சட்டத்தின்படி மேல் நீதிமன்ற...
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள அழைப்புக்கு இணங்கி தாம் இலங்கையில் சென்று குடியேற விரும்புவதாக இலங்கைப் பெண்ணொருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசீலிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம், தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பரிசீலனை இரண்டு வாரத்துக்குள் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது...
இயக்குநர் கே பாலச்சந்தர் உடல் நிலையில் இன்று மேலும் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் உடல் நிலை கவலைக்கிடமானது. அவரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவரை ரஜினிகாந்த் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் போய்ப் பார்த்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் கே பாலச்சந்தர் உடல்...
"தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் நானே. எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். அரசியலுக்கு வரும் எவ்வித நோக்கமும் எனக்கில்லை." இவ்வாறு மஹிந்த அரச தரப்பினரால் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்றுத் தெரிவித்தார். 2013 ஜனவரி முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும்,...
அடுத்த மாத முற்பகுதியில், முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும். இவ்வாறு நேற்று புதன்கிழமை சவால் விடுத்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி குறித்து தான்...
கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை புகையிரதம் மோதியதில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான...
அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘பிசாசு’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘மீகாமன்’, ‘சுற்றுலா’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ‘பிசாசு’ படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். டைரக்டர் பாலா தயாரித்து உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். திகிலான பேய் படமாக தயாராகியுள்ளது. மிஸ்கின் எடுக்கும் முதல் பேய் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. கிறிஸ்துமசுக்கு முன்னதாக 19–ந்தேதி இப்படம்...
‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது. தற்போது, ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts