Ad Widget

சிம்புவுக்கு பரபரப்பு கொடுக்க வரும் மார்ச் மாதம்

சிம்பு நடித்த படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் உள்ளன. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் முடிவடைந்தும் ரிலீசாகமல் உள்ளது. மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதத்தில் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் முடிக்கவுள்ளதாக சிம்பு கூறியுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர்...

நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய நோர்வே நிபுணர்கள் வருகை

வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்....
Ad Widget

உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர் மற்றும் அளுநருக்கு முறைப்படி அறிவித்தல் விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்...

ஐ.நா. உயர் அதிகாரி சனியன்று கொழும்பு வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்டே இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை...

வித்தியாசமான புகைப்போக்கி

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் சமையல் அறையில் அமைக்கப்பட்ட புகைப்போக்கி வித்தியாசமான முறையில் எண்ணெய் பரல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் சீமெந்து கட்டுக்களிலான புகைப்போக்கிகள் வீடுகளில் நிர்மாணிக்கப்படுவது வழமை. எனினும் இந்த புகைப் போக்கியானது 5 எண்ணெய் பரல்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்போக்கி சரிந்து விழாமல் இருப்பதற்கு உறுதுணை கம்பிகளும் கட்டப்பட்டுள்ளன.

இரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

புதிய இராணுவத் தளபதி – ஜனாதிபதி சந்திப்பு!

புதிதாக அண்மையில் நியமனம் பெற்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எ.டபிள்யூ.ஜே.கிரிசாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். புதிதாக இராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர் தனது நியமனத்தின் பின் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி...

சுழிபுரம் கொலையாளியை கொல்லப்பட்டவரின் மனைவி, அடையாளம் காட்டினார்

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு...

ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத்தேர்வு

இலங்கை ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத் தேர்வு இலங்கை சாரணர் தலைமையக பிரதி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட சாரண ஆணையாளர் ச.சௌந்தரராஜனினின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், இலங்கை சாரணர் தலைமையகத்தைச் சேர்ந்த ரூபன் ஆரியரத்தின, எஸ்.சௌந்தரராஜன், சரத் சோம விக்கிரம சிங்க,...

கணவனுக்காக கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

யாழில் கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி மானிப்பாய் பொலிசாரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் திருமணம் முடித்துள்ளார். அவர் தனது தனது கணவர் கேட்டதற்கு இணங்க, 50 கிராம் உடைய கஞ்சாவை வாங்கிச் சென்றுள்ளார். இதன்போது வீதியில் வைத்து பொலிசார் இவரைக் கைதுசெய்துள்ளனர்....

ஜெயக்குமாரியைத் தொடந்தும் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவு!

பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம்...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கடந்த 30 வருடகாலமாக பேராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களின் தரத்துக்கு ஏற்ப பதவிகளை வழங்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன் இந்த பிரேரணையை...

வடமாகாண சபையின் அவை அமைப்பு மாற்றப்படவுள்ளது

வடமாகாண சபையின் அவை அமைப்பை மாற்றுவதுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற போதே, அவைத்தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், அவை நடவடிக்கை இடம்பெறும் போது அவைக்கு குறுக்கே...

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாணத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்று வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும் என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன்...

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் பருத்தித்துறை நகர சபை குப்பைகளை கொட்டுகிறது

பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தும்பளை பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நகர சபையால் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். நகர சபை தவிசாளர் சபா ரவீந்திரனுக்கு சொந்தமான காணியொன்றிலே இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இதனால் தங்களுக்கு வீடுகளைச் சூழ்ந்து புகைமூட்டம் காணப்படுவதுடன்...

தவறணையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

கிளிநொச்சி பிரமந்தனாறு நாதன் திட்டப் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (23) இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த தர்மரத்தினம் தர்மசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கல்லாறு பகுதியிலுள்ள தவறணையில் திங்கட்கிழமை...

வெல்டிங் வேலை செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்

கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (24) வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்த எஸ்.ஆனந்த் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர், வீடொன்றின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, தவறி வீழ்ந்துள்ளார். இவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக...

சமூக சுகாதாரத் தொண்டர்கள் வடமாகாண சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண சபையின் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெறும் வேளையில், அமர்வில் கலந்துகொள்ள வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க நாம் தடையல்ல – முதலமைச்சர்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கு உள்ளூராட்சி அமைச்சுக்கு உரிய முறையில் கோரிக்கையினை முன்வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 25 ஆவது மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் ரவிகரன் முதலமைச்சரிடம் வாய்மொழி மூலமாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 2014.01.27 ஆம் திகதி...

மூன்று தோற்றங்களில் ஜீவா நடிக்கும் புதிய படம்

யான் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஜீவா, இயக்குனர் ராம்நாத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா முன்றுவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்றுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்கம் சீனு. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க...
Loading posts...

All posts loaded

No more posts