Ad Widget

சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க வல்லைச் சந்தியில் பொலிஸ் சாவடி!!

வல்லைச் சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட வேண்டும் என்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,வல்லைச் சந்தியில் உடனடியாக வல்லைச் சந்தியில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

நேற்று சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு வரும் வாகனங்களை வல்லைச் சந்தியில் சோதனை செய்ய வேண்டும் இதற்காக வல்லைச் சந்தியில் போலிஸ் போஸ்ட் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதன் பின்னர் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில்,

வைத்தியர் கேட்டுக் கொண்டது போல் வல்லைச் சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி உடனடியாக அமைக்கப்படும்.ஆனால் 24 மணிநேரமும் வாகனங்களை சோதனை செய்ய முடியாது.ஆனாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனங்களை சோதனை செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts