Ad Widget

மகிந்தா ஆண்டாலும், மைத்திரிபால ஆண்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் நிலை இதுதான்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம்...

ஏ-9 வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்; பொலிஸார் கடமையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் ஏ-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, பொலிஸார் அப்பகுதியில் கடமையில் ஈடுபடவில்லை. இச்சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டுள்ளதனால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Widget

யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை

மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதனால் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகமும் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விரைகிறது காவல்துறையின் உண்மையைக் கண்டறியும் குழு!

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்போவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது எனவும், மாணவர்கள் மரணம் தொடர்பாக அந்தக்குழு விசாரணை நடாத்துமெனவும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்களின் கொலை தொடர்பான...

பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

வடமாகாணம் முழுவதும் நாளை செவ்வாயக்கிழமை (25-10-2016) நடைபெறவுள்ள பூரண ஹர்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை (20-10-2016) இரவு ஸ்ரீலங்கா பொலீசாரினால் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு...

மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்-பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்  எனபல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது அவர்களது அறிக்கை வருமாறு கடந்த வெள்ளிக்கிழமை(20-10-2016) இரவு கொக்குவிலில் இரண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானது எமக்கும் யாழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் வேதனையையும் தருகின்றது. நல்லாட்சி அரசு என்கின்ற பெயரில் ஆட்சி...

வடக்கில் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தால்.-தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை திங்கட்கிழமை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மேற்படி கர்த்தால் அழைப்பும் வெளிவந்துள்ளது. 1.இலங்கை தமிழரசுக் கட்சி 2.தமிழீழ விடுதலை இயக்கம் 3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி...

சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு ! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...

வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு

வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள்...

பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்க முடியாது ; வட மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை, ஏற்றுக்...

மரணவீட்டில் அரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது. மாணவனது...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்படமுடியாது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இந்த கொலைகள் தொடர்பில் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன், நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்...

உயிரிழந்த யாழ் மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

கொக்குவில் - குளப்பிட்டியில் வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு வழங்கப்படும் என, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பொது நூலகத்தில் ஜனாதிபதி தமிழ் ஊடகப் பிரிவினர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் இருவர் இறந்த செய்தி கேட்டு ஐனாதிபதி மிகுந்த...

நாளை பல்கலைக்கழகங்களில் போராட்டம்- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்  போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர. அவர் மேலும்...

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொடூரமான கொலை: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

2009 ஆம் ஆண்டிற்கு பின் இடம்பெற்ற மிக கொடூரமான சூட்டுச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி சரவணபன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன் தினம் யாழ் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும்...

யாழ்.பல்கலைகழக மாணவனின் உடலம் கிளிநொச்சியில் அஞ்சலிகாக வைக்கப்பட்டுள்ளது

பொலிசாரின் துப்பாக்கி சூட்டின் போது, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் யாழ்.பல்கலைகழக 3ஆம் வருட மாணவன் நடராசா கஜனின் உடலம் தற்போது கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர் குறித்த இளைஞனின் கொலையால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? மனோ

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட...

பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டால் இரண்டு அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளமை பெரும் கவலையளிக்கும் விடயமாகும். பொலிஸாரின் அத்துமீறிய இத்தகைய செயற் பாடு குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை...

வடக்கில் அரச பயங்கரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதா? என். சிறிகாந்தா

>பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி முழுமையாக ஆராயப்பட வேண்டும். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோருகின்றேன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பில்...

சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சுரேஸ் கேள்வி

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts