Ad Widget

சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு ! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே வெட்டியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். குறித்த கடையின்  கணக்கு பிரிவில்   இருந்தவரிடம் வாள்களைக்காட்டி மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.

அப்பகுதியில் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற போது இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு குறித்த ரவுடிக்கும்பல் தப்பித்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து உடனடியாக சுன்னாகம் பகுதியில் ஏராளமான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது .ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது;

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியப் புலனாய்வு அதிகாரிகளின் கைகளிலும், தலையிலும் வாள்களால் வெட்டப்பட்டிருக்கிறது.

14702454_1140597712698012_1348175177126472254_n

14656388_1140597626031354_7176327520637167011_n

Related Posts