Ad Widget

வடக்கில் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தால்.-தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.
இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை திங்கட்கிழமை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மேற்படி கர்த்தால் அழைப்பும் வெளிவந்துள்ளது.

1.இலங்கை தமிழரசுக் கட்சி
2.தமிழீழ விடுதலை இயக்கம்
3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
4.தமிழர் விடுதலைக் கூட்டணி
5.தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
6.தமிழர் சமூக ஜனநாயக கட்சி
7.தமிழ் தேசிய மக்கள் முன்னணி   ஆகிய கட்சிகள் இந்த அழைப்பினை இதுவரை வெளியிட்டுள்ளனர்.  ஏனைய கட்சிகளும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts