Ad Widget

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொடூரமான கொலை: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

2009 ஆம் ஆண்டிற்கு பின் இடம்பெற்ற மிக கொடூரமான சூட்டுச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி சரவணபன் தெரிவித்துள்ளார்.

jaffna-campus-teacher-socity-uni

நேற்றுமுன் தினம் யாழ் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவமானது முதலில் விபத்து என தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியான பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த விடயம் எமது ஆசிரியர் சமூகத்தையும் மாணவர் சமூகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அத்துடன் குறித்து சம்பவம் துப்பாக்கி சூட்டுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் எவ்வாறான வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts