பெண்களை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினர்

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. அகதிகளை தரையிறங்க விடாமல் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்த...

அகதிகளைத் தரையிறக்க இந்தோனேசியா அனுமதிக்க வேண்டும்!

இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளை தரையிறக்குவதற்கு இந்தோனேசிய மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை அதிகாரிகளை சந்திப்பதற்கு இடமளிக்க வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அகதிகள் ஏற்கனவே ஆபத்தான மற்றும் நீண்ட கடல் பயணத்தை...
Ad Widget

பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின்...

டீசலைக் கொடுத்து படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக்தொன் டீசலைக் கொடுத்து தனது கடற்பிரதேசத்தைவிட்டு வெளியில் அனுப்புவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிப் பயணித்தபோது இடையில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்த படகு கடந்த சனிக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படகினைச் சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்த அகதிகளிடம்...

ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் பலி?

ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு சிரியாவில் உள்ள ராக்கா என்ற இடத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அமெரிக்க படைகள்...

மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் இந்தோனேசியாவின் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 15 பெண்கள், ஒன்பது சிறுவர்கள் உள்ளிட்ட 44 பேருடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகு, இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின்...

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை!!

>பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம்...

அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கையர் போட்டி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜகத் பண்டார, தமது கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய லேபர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 2ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தான், அங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) சென்ற நாள் முதல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த...

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன?: கொலையாளியின் தந்தை பரபரப்பு பேட்டி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிதான் நாட்டில் இருந்து வந்து...

துப்பாக்கி சூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில்...

அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்....

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார்!, முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமது பாதுகாப்பு மற்றும் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பதற்கும் உத்தரவாதம் வழங்குகின்ற பட்சத்தில் சாட்சியமளிக்க தயார் என அவர்கள் கூறியுள்ளதாக,...

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி

அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை ஒரு பயங்கரவாதத்...

அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக சுட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைபலனின்றி அவர்...

40 இலங்கையர்கள் நிர்க்கதி

தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 40 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக, இந்தோனேஷியப் பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

மனித இனத்தை காப்பாற்றப் போகும் நுளம்புகள்!

ஸிக்கா வைரஸிடமிருந்து மனித இனத்தை காப்பாற்றப் போவது, பல நோய்களை பரப்பும் நுளம்புகள் என ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் ஸிக்கா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸிற்கு எதிரான போரட்டத்தில் நுளம்புகளையே களமிறக்க முடியும்...

அரசு ஊழியர்கள் அலுவலகக் கணினியிலிருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து அரசு ஊழியர்கள் அவர்கள் அலுவலகக் கணினியில் இருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பணி தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் பகிரப்படும் ஆவணங்களின் தகவல்கள் கசியும் சாத்தியக்கூறைத் தடுப்பதே என "தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் "என்னும் செய்தித்தாள் தெரிவிக்கிறது....

கணிணியில் விளையாடிய 12 வயது சிறுவன் திடீர் மரணம்: காரணம் என்ன?

பிரித்தானிய நாட்டில் கணிணியில் ’ஹேம்’ விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான இந்த சிறுவன் இணையத்தளத்தில் வெளியாகும் புதிய புதிய விளையாட்டுகளை விளையாடுவது...

வேலை பார்க்கா விட்டால் சம்பளம் வேண்டாம்: சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் அடிப்படை மாதாந்திர சம்பளம் ஒரு தொகை வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாத ஊதியமாக 2,555 டாலர் (இலங்கை மதிப்பளவு சுமார் ரூ.3 லட்சத்து 76 ஆயிரம்) வழங்க முன் மொழியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மாதம் 625 டாலர் வழங்கவும்...

வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அனைவருக்கும் மாதம் 2,555 டாலர்கள்

சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது. சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே முதல் முறையாக வாழ்கிற அனைத்து மக்களுக்கும், அவர்கள் வேலை செய்கிறவர்களாக இருந்தாலும், வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் அடிப்படை மாதாந்திர ஊதியமாக ஒரு தொகை வழங்கும் திட்டத்தை...
Loading posts...

All posts loaded

No more posts