Ad Widget

முடிவுக்கு வந்தது வங்கதேச துப்பாக்கிச் சண்டை

வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினருக்கான உணவு விடுதிக்குள் புகுந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு இருந்த 2 பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கிருந்த 40 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

bankaladesh

இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சுமார் 10 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வேறு யாராவது மறைந்து இருக்கிறார்களா என பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடந்த உணவு விடுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 8 பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதி ஒருவனை உயிருடன் பிடித்திருப்பதாகவும், அவனிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றி உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts