Ad Widget

ஈராக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்வு

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளது.

irack_CI

புனித ரமழான் கொண்டாட்டங்களுக்காக பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்துஇந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாரிய லொறி ஒன்றில் வெடிபொருட்களை நிரப்பி இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈராக்கிய அரசாங்கம் மூன்று நாள் தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஈராக்கில் இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்புச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts