- Sunday
- June 22nd, 2025

இலங்கை, அதன் இராணுவ படைகளை கட்டுப்படுத்துவதோடு, போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களான ஒரு பயனுள்ள இடைக்கால நீதி பொறிமுறையின் கீழ், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், என,...

உலகின் முதல் தயாரிப்பு நிலை பறக்கும் கார் மாடலாக கருதப்படும் டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் டிரான்சிஷன் பறக்கும் காருக்கு அமெரிக்க வான்போக்குவரத்து ஆணையம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளித்துள்ளது. டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, விதிமுறைகளில் சிறப்பு தளர்வுகளுடன் இந்த காருக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, போக்குவரத்து துறை புதிய அத்யாயத்தில் நுழைய இருக்கிறது. லைட் ஸ்போர்ட்ஸ் ஏர்கிராஃப்ட்[LSA] என்ற...

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக விசாரணை அவசியம் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா...

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்....

அமெரிக்காவில் புயலு டன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கும், அதனால் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதில் விர்ஜீனீயா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 8 வயது சிறுவனும், கைக் குழந்தையும் அடங்கும். இதை தொடர்ந்து விர்ஜீனியாவில் 44 பகுதிகளில் அவசர...

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று அளித்த தீர்ப்பை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். சற்று முன்னர் தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்....

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. "பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த...

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள்...

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில்...

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன...

சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள்...

இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம்...

19 இலங்கை சிறுவர்கள் உட்பட 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர், குழந்தைகள் மீதான பாலியல் இச்சைக்கொண்ட நபரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. டெரி டெரன்டையர் என அடையாளம் காணப்பட்ட 53 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேரந்த குறித்த சந்தேக நபர் இலங்கை, தன்சானியா மற்றும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த 66 சிறுவர்களை...

கையடக்க தொலைபேசியில் 'செல்பி' எடுப்பது தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சிலர் 'செல்பி' எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி 'செல்பி' எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய்...

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் ஆஸ்பென் நகருக்கு அருகே லோயர் உட்டிகிரீக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்த 5 வயது சிறுவன், கடந்த 17–ந் தேதி இரவு தனது சகோதரனுடன் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். வீட்டுக்குள் இருந்த தாய்க்கு திடீரென தனது 5 வயது மகன் அலறுகிற சத்தம் கேட்டது. உடனே அவர்...

செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில்...

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண், ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 44 அகதிகள்...

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரித்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன. 44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது. அப்படகில் ஒரு கர்ப்பிணிப் பெண்,...

இந்தோனேஷிய அச்சே பகுதியில் நிர்கதியாகியுள்ள 44 இலங்கை அகதிகளையும் தற்காலிகமாக தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படகில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், பழுதடைந்துள்ள படகை திருத்துவதற்கும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் சைனி...

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. அகதிகளை தரையிறங்க விடாமல் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்த...

All posts loaded
No more posts