இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே...

சிறுவனை தூக்கி கொண்டு செல்ல முயன்ற கழுகு

மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர்...
Ad Widget

பதவி விலகுகிறார் டெவிட் கமரூன் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே பதவியேற்கிறார்

பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக...

7,500 இசைக் கலைஞர்களுடன் நடைபெற்ற பிரம்மாண்ட இசைக் கச்சேரி

ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர். இதில், பீத்தோவனின் ''ஒடே டூ ஜாய்'' இசையும் அடக்கம். மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா...

நூற்றுக்கணக்கானோர் பலி !! மோதலை நிறுத்த தென் சூடான் தரப்புகளைக் கோருகிறது ஐ.நா

தெற்கு சூடானில் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரு தரப்புகளும் மோதலை நிறுத்தி, வன்முறை பரவுவதைத் தடுக்குமாறு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது. ஏகமனதாக விடுத்த அறிக்கை ஒன்றில், ஐநா பாதுகாப்பு சபை, இந்த மோதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஐநா அலுவலகங்களும் தாக்கப்பட்டது குறித்து குறிப்பான அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பதில் நடவடிக்கையாக அங்கு மேலும் கூடுதல்...

சிறையை உடைத்து காவலரின் உயிரை காத்த கைதிகள்

அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுயிருந்தனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென...

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம்...

அப்பாவியை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசாரின் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங்(37) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம், அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. பல பகுதிகளில் போலீசாரின் அத்துமீறலுக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு...

விஸ்தரிக்கப்பட்ட பனாமா கால்வாய் வழியாக பயணித்த கப்பலின் கப்டன் இலங்கைத்தமிழர்!

MOL Benefactor’ என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை கடந்த 1 ஆம்...

வங்காளதேசத்தில் ரமலான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடிப்பு

வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 வெளிநாட்டவர்கள் பலியான சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், அங்கு ரமலான் தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டு வெடித்தது. வங்கதேசத்தின் கிஷாரிகஞ்ச் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை பிரம்மாண்ட தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை நடந்த இடத்திற்கு அருகே...

ஒலிம்பிக் போட்டிக்காக சிறுவர்களை வதைக்கும் சீனா! (வீடியோ)

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துவரும் சீனா, இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியிலும்...

சவுதியில் இரு புனித தலங்கள் அருகே குண்டுவெடிப்பு

சவுதி அரேபியாவில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முக்கியமான ஒன்றான மதினாவில், மசூதி அருகே தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் அல்-அரேபியா தொலைக்காட்சி வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்டுள்ள...

ஈராக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்வு

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளது. புனித ரமழான் கொண்டாட்டங்களுக்காக பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்துஇந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிய லொறி ஒன்றில் வெடிபொருட்களை நிரப்பி இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து...

பங்களாதேஷ் தாக்குதல்: 20 பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் உரிமை கோரப்பட்டுள்ள தாக்குதலில், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள கபேயொன்றில், கொமாண்டோக்கள் உள் நுழைந்த பின்னர், 12 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்த முற்றுகையில் 20, வெளிநாட்டு பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில், பெரும்பாலோனோர், கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டு இறந்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் நயீம் அஷ்ஃபக் சௌத்திரி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட...

முடிவுக்கு வந்தது வங்கதேச துப்பாக்கிச் சண்டை

வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினருக்கான உணவு விடுதிக்குள் புகுந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு இருந்த 2 பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கிருந்த 40 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சுமார் 10 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்....

ஜூபிட்டரின் தலையில் ஔிக்கிரீடம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிப்பட்டுள்ள ஜூபிட்டர் (வியாழன்) கிரகத்தின் புகைப்படத்தில் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடம் இருப்பது போல் போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக தெரிகிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள்...

பங்களாதேஷ் தாக்குதலில் பணயக்கைதிகளா இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர். இலங்கையர் இருவர் உள்ளிட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகம் கூறுகிறது. அந்த இருவருடைய குடும்பத்திற்கும்...

ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என மெஜாரிட்டி ஆக 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரிட்டனில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ...

விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு : 32 பேர் பலி

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தில்...

ஜெனிவாவில் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர் பிரதிநிதிகள்

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இலங்கை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வட மாகாண சபை...
Loading posts...

All posts loaded

No more posts