Ad Widget

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் அருகே சென்னால்ட் உள்ளது. அங்குள்ள தேவாலயத்தின் சார்பில் பெற்றோர், உறவினர்கள் மறுஇணைப்புக்காக ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று சுமார் 20 பேர் கூடி இருந்தனர்.

201607310013342325_3-killed-in-shooting-at-party-in-Washington-police-say_SECVPF

அப்போது அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர், கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இருப்பினும் குண்டு பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, ஹார்பர்வியூ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய நபர், லெவிஸ் நகரில் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

எனினும் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பின்னணி என்ன, இது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.

Related Posts