Ad Widget

சொந்த மகளையே கத்தியால் குத்திய தாய்!!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது தாயாரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமொன்று, இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

mother-dou-1

குமாரி மஹேந்திரன், என்ற 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

சித்ரானி மஹேந்திரன், என்ற 74 வயதான தாயாரே தனது மகளை கத்தியால் குத்தியுள்ளார்.

தான் உறக்கத்தில் இருந்தபோதே தனது தாய் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ள அவ் யுவதி , பின்னர் தான் விழித்துக்கொண்டதும் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் , 2013 ஆம் ஆண்டு ‘மிஸ் வேல்ஸ்’ அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்துள்ளார்.

mother-dou-2

தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு  செய்த தாகவும் , இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்க க் கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான வழக்கு கார்டிப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும் குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts