- Monday
- July 6th, 2026
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும்...
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஐந்து...
ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் அரண்மனையில் நடந்த விழாவில் பாப்பரசர் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டத்தை சூட்டி, அருளாசி அளித்தார். 1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில்...
இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர், ஸிகா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அத்தகைய பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். `தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான...
ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக...
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு...
எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப்பட்டலும் கூட அது...
இத்தாலியின் மையப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியை 6.2 ரிக்டர் அளவில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 368 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பல கிராமங்கள் பேரழிவை எதிர்நோக்கியுள்ளன. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...
கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமாம். அமெரிக்கா முழுவதும் மொத்தமாக...
இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது. உம்பிரியா பிராந்தியத்திலுள்ள நோர்ச்சா நகரத்துக்கு அண்மையில், இத்தாலி நேரப்படி அதிகாலை 3.36க்கு (இலங்கை நேரப்படி காலை 6:06), இந்தப் பூமியதிர்ச்சி...
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தாலியின் தென்கிழக்கு நகரமான இல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக பாரியளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம்...
நாதஸ்வரத்தைப் போல, பிரிட்டனில் தாமிரத்தாலான பேக்பைப் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களுக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். அந்தக் கருவியின் குழாயை முறையாக, அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதில் பல ஆண்டுகளாகப் படியும் அழுக்கு, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, ஓர் இசைக்கலைஞரின் பேக்பைப்பில் படிந்த அழுக்கு, அவரது நுரையீரலில் குணப்படுத்த...
ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, 46 வயதான குறித்த நபர்...
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும். பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான்...
சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
சிரியாவில் 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை 2.7 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் உள்நாட்டு போரினால் மடிந்தவர்கள் ஏராளம். இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி...
கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த...
பிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இரு பெரிய தேன் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி வளர்ப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். குறைந்தது 5 வருடங்களாக இந்த...
ஆட் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அறுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
