Ad Widget

செவாலியே விருது வென்ற 7 தமிழர்கள்!

எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது.

இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப்பட்டலும் கூட அது துணுக்கு செய்தியாகவோ, துண்டு செய்தியாகவோ மறைந்துவிடும். இது செவாலியே விருதுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல.

நடிகர் கமல் ஹாசனுக்கு முன்னரே 7 தமிழர்கள் செவாலியே விருது பெற்றுள்ளனர்…

அஞ்சலி கோபாலன்

anjaly-kobalan

திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. அக்டோபர் 25, 2013 இல் செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய தமிழ் பெண் அஞ்சலி கோபாலன்.

மதன கல்யாணி

mathana-kalyani

புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மதன கல்யாணி. இவர் தமிழ் மற்றும் பிரெஞ்சு இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது பணிகளை பாராட்டி இவருக்கு செலாவியே விருது வழங்கப்பட்டது.

சிவா இராமநாதன்

Sivayoganayaki - chevaliyarviruthu

சிவா இராமநாதன், இவரது இயற்பெயர் சிவயோகநாயகி. பிரான்சு நாட்டின் செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். இவர் ஒரு ஆசிரியர்.

இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறை, பொலிகண்டி, திக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பொலிகண்டி கந்தவன ஆலயத்தை பரம்பரையாக பரிபாளித்துவரும் ஆதீன கர்த்தாக்களின் குடும்பத்து சைவப்பெரியார் திக்கம் செல்லையாப்பிள்ளை, இராயமுத்து அம்மையார் தம்பதிகளின் கடைசிமகள்.

Sivayoganayaki_-_chevaliyarviruthu_2

இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும் கற்றார். அதன் பின் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் சேர்ந்து மனையியலில் சிறப்புப் பட்டம் (B .Sc) பெற்று 1963 இல் மேலும் ஒரு பட்டத்தைப் பெற்றார். 1965 இல் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகக் கடமை புரிந்து 1970 இல் பகுதி நேர விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் 1972 இல் நிரந்தர நியமனம் பெற்று அளுத்கம ஆசிரிய பயிற்சிக்கல்லூரியிலும் பின் 1973 இல் பதவி உயர்வுடன் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரயளராகவும் கடமையாற்றினார்.

1975 இல் பிரெஞ்சு அரசின் மேற்படிப்பு புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டார். பிரான்சில் விஷி என்ற ஊரில் கவிலம் என்ற பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு மொழியை 9 மாத காலம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அதன் பின் பாரிசில் தன்துறை சார்ந்த மேற்படிப்பை மேற்கொண்டு அதில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கக் கூடிய பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார். இவரது இந்தப்படிப்பு சொபோரோ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதான எம்.எஸ்.சி. பட்டப்படிப்புக்குச் சமமானதாகும். 1977 இல் மீண்டும் பலாலிக்குத் திரும்பி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் பின்னர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பிரெஞ்சுத் தூதரகத்தின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை 1979 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கற்பித்தார். அதேவேளை யாழ் கல்வி வலயம் 2 இல் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் பிரெஞ்சு மொழியை யாழ்ப்பாணம் Alliance Francaise நிறுவனத்திலும் கற்பித்து வந்தார். இவர் பிரெஞ்சு மொழியை 25 வருடங்களாக கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஒக்டோபர் 2009 இல் கல்விக்காக செவாலியர் விருதினைப் பெற்றார். பிரெஞ்சு மொழியினை இலங்கையில் கற்பித்து, அம் மொழியினையும், பிரான்ஸ் நாட்டு கலாசார பங்களிப்பினையும் இலங்கையில் பல ஆண்டுகளாக பரப்பியதோடு, இவர் கல்வித் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக பிரான்ஸ் நாடு கல்வி அமைச்சினால் (2009) இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதுவரின் இல்லத்தில் வைத்து, தூதரால் இந்த விருது இவருக்கு வழங்கப்பெற்றது.

சிவாஜி கணேஷன்

sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்-க்கு கடந்த 1995-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

ஷெரீன் சேவியர்

மனித உரிமைசார் பணிகளுக்காக இவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.

நாகநாதன் வேலுப்பிள்ளை

நாகநாதன் வேலுப்பிள்ளை, ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 23 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர்.

நடிகர் அலக்ஸ்!

alaks

குணசித்திர நடிகர் அலக்ஸ்-க்கு கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்லுள்ள அபுதாபியில் செவாலியே விருது வழங்கியதாக பிரபல தமிழ் செய்தி இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதா என்பது அறியப்படவில்லை.

Related Posts