மனதை உருக வைக்கும் சிரியா சிறுவனின் புகைபடம்

சிரியாவில் 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை 2.7 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் உள்நாட்டு போரினால் மடிந்தவர்கள் ஏராளம். இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி...

சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் 18000 பேர் உயிரிழப்பு

கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த...
Ad Widget

மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்

பிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இரு பெரிய தேன் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி வளர்ப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். குறைந்தது 5 வருடங்களாக இந்த...

6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் : ஆஸி அறிக்கை

ஆட் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அறுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

”பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இணையம்”: எச்சரிக்கும் உளவியல் வல்லுநர்

அதிகளவிலான இணையவழி பாலியல் படங்களை பார்ப்பதால் இளம் ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று...

இலங்கையின் அழுத்தத்தினால் தமிழீழம் நீக்கப்பட்டுள்ளது!

அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள்...

முன்னாள் போராளிகளின் மர்ம மரணம்: சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர்...

பசிபிக் தீவில் நிலநடுக்கம்

பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது.

ஆவிக்கு சான்றிதழ் தர முடியுமா? அதிர்ந்தது சீன போலிஸ்!

ஒருவருடைய சுய விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்களை சேர்த்து சீன அதிகாரிகள் குழப்பியுள்ளனர். ஒருவரின் அடையாள எண்ணை, அதே மாதிரியான இன்னொருவரின் அடையாள எண்ணோடு சேர்த்து குழப்பி விடுகின்ற தவறுகளை ஒழித்துவிட, சீன அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சீன ஊடகங்களால்...

உணவுப் பரிசாரகர் பணியில் பராக் ஒபாமாவின் புதல்வி சாஷா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய புதல்வியான சாஷா ஒபாமா தற்காலிகமாக வெள்ளைமாளிகையைத் துறந்து கடலுணவு உணவகம் ஒன்றில் கோடைவிடுமுறை வேலை வாய்ப்பைப்பெற்றுள்ளார். மசாசூட்ஸ் மாநிலத்திலுள்ள மார்த்தா வைன்யாட் உள்ள Nancy’s Restaurant உணவகத்தில் உணவு பரிமாறும் பரிசாரகராக 15 வயதான சாஷாஒபாமா பணிபுரிவதாகவும் அவருக்குப் பாதுகாப்பாக அமெரிக்க இரகசியபுலனாய்வு சேவையை சேர்ந்த 6 முகவர்கள்...

பிரான்ஸ் நாட்டு வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின்!!

பிரான்ஸ் நாட்டு வீதிகளில் ஒயின் வெள்ளம் சூழ்ந்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர்...

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானியக் கடற்பரப்பில் விழுந்தது

வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பேலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடல் பரப்பில், தரையிறங்கியுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இந்த செயலை சினத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேர்ந்த அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இரண்டு...

லண்டனில் மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பெண் பலி: 6 பேர் காயம்

லண்டனில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: மத்திய லண்டனின் ரசல் சதுக்க பகுதியில், அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென அருகில் உள்ளவர்களை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6...

300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

இந்தியா திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு...

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன....

சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில்...

இருமல் மருந்தில் விஷத்தன்மையால் 400 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், 2006–ம் ஆண்டு, நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை குடித்து ஏராளமானோர் பலியாகினர். இதில் 400 பேர் பலியானதாக அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், பல்வேறு அமைப்புகள் சுமார் 10 ஆயிரம் பேர் பலியானதாக கூறின. இந்த இருமல் மருந்துக்கான டி.டி.கிளிசரின் என்ற மூலப்பொருளை சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஸ்பானிய நிறுவனம்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் அருகே சென்னால்ட் உள்ளது. அங்குள்ள தேவாலயத்தின் சார்பில் பெற்றோர், உறவினர்கள் மறுஇணைப்புக்காக ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று சுமார் 20 பேர் கூடி இருந்தனர். அப்போது அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர், கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்....

ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி

இந்தியாவின் 70–வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15–ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு...

கால் தடுக்கி கீழே விழுந்தார் பாப்பரசர்

போலந்து நாட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றி பாப்பரசர், காலிடறி கீழே விழுந்துள்ளார். பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் திரும்புகையில் அவரது கால் தடுக்கியுள்ளது. அருகில் இருந்த மதகுருமார்களின் துணையுடன் உடனே எழும்பி நின்றார் அதிஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் எனினும்...
Loading posts...

All posts loaded

No more posts