வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் தற்போது பதிவு செய்ய அனுமதி

பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க நேபாள சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள...

பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கைத் தமிழ்த் தம்பதிகள் மீது வழக்கு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்ததாக இலங்கை தம்பதியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 48 வயதான குமுதினி கண்ணன், 52 வயதான கந்தசாமி கண்ணன் இருவருமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். ஜூலை 2007 தொடக்கம் ஜூலை 2015 வரையிலான...
Ad Widget

திடீரென ரத்த சிவப்பாக நிறம் மாறிய ஆறு!! பீதியில் பொது மக்கள்!

ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென...

ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து இங்கிலாந்த பெண் கின்னஸ் சாதனை

இங்கிலாந்தின் பேர்க்ஷையர் பிராந்தியத்தின் ஸ்லவ்(Slough) பகுதியைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது முகத்தில் ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து சாதனை சொந்தமாக்கியுள்ளார். ஹார்னாம் கௌர் என்ற 24 வயதான இளம் மொடல் அழகியே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். இவரின் உடலில் ஆண்களில் சுரக்கும் ஓமோன்கள் அதிகம் சுரக்கின்றமையால் இவ்வாறு...

ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கை அகதிகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும்...

புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை!

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஐந்து...

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்

ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் அரண்மனையில் நடந்த விழாவில் பாப்பரசர் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டத்தை சூட்டி, அருளாசி அளித்தார். 1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில்...

250 கோடி பேருக்கு ஸிகா வைரஸ் அச்சுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர், ஸிகா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அத்தகைய பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். `தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான...

ஈழ புகலிட கோரிக்கையாளரின் நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் ஆர்ப்பாட்டம்

ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக...

இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு...

செவாலியே விருது வென்ற 7 தமிழர்கள்!

எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப்பட்டலும் கூட அது...

247 பேரை காவுகொண்டது இத்தாலியின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இத்தாலியின் மையப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியை 6.2 ரிக்டர் அளவில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 368 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பல கிராமங்கள் பேரழிவை எதிர்நோக்கியுள்ளன. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது....

பிரிட்டன் கடலில் மூழ்கி இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...

2100க்குள் பல நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம்!

கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமாம். அமெரிக்கா முழுவதும் மொத்தமாக...

இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி

இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது. உம்பிரியா பிராந்தியத்திலுள்ள நோர்ச்சா நகரத்துக்கு அண்மையில், இத்தாலி நேரப்படி அதிகாலை 3.36க்கு (இலங்கை நேரப்படி காலை 6:06), இந்தப் பூமியதிர்ச்சி...

இத்தாலியில் நிலநடுக்கம்

மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தாலியின் தென்கிழக்கு நகரமான இல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக பாரியளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம்...

இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்களுக்கு எச்சரிக்கை!!

நாதஸ்வரத்தைப் போல, பிரிட்டனில் தாமிரத்தாலான பேக்பைப் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களுக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். அந்தக் கருவியின் குழாயை முறையாக, அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதில் பல ஆண்டுகளாகப் படியும் அழுக்கு, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, ஓர் இசைக்கலைஞரின் பேக்பைப்பில் படிந்த அழுக்கு, அவரது நுரையீரலில் குணப்படுத்த...

ஜெருசலத்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்

ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, 46 வயதான குறித்த நபர்...

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும். பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான்...

இலங்கையில் தேடப்படும் தீவிரவாத குற்றவாளி கனடாவில்

சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts